Wednesday, February 12, 2014

Father of Genetics

மரபியலின் விஞ்ஞானத்தின் தந்தையாக கருதப்படும் கிரிகர் மெண்டல் – ஒரு கிருஸ்துவ பாதிரியார். அவர் தனது சமயயப் பணிகளோடு சேர்ந்து இயற்க்கையை பற்றிய ஆய்விலும் ஈடுபட்டார்... இதற்காக பட்டாணி செடிகளுக்குள் கலப்பு செய்து வீரிய ரக விதையை உருவாக்கிட முயன்றார். இந்தப் பணியில் தினமும் நான்கு மணி நேரம் என, ஒரு பட்டாணி செடியின் பத்து தலைமுறைகள் எப்படி உருமாறுகின்றன என்று பல நாட்கள் பட்டாணி செடியை கவனித்தவபடியே தன் வருடங்களை கழித்தார். முடிவில் தனது ஆய்வு முடிவை தனது தலைமை பாதிரியாருக்கு எழுதியனுப்பினார்.

அவரது ஆய்வு கவனிக்கபடாமல் போனதோடு, பட்டாணி செடிகளின் விதைகளை சேதனை செய்து வீரியமாக்குவது கடவுளுக்கு எதிரான செயல் என்றும், இதுபோன்ற தீவினைகளில் ஈடுபடுவதை அவர் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதனால் அவன் மனம் உடைந்து போய், தனது ஆய்வை மிக ரகசியமாக செய்து வந்தார். எதையும் உலகுக்கு வெளிபடுத்தவே இல்லை.

இருநுறு வருடங்களுக்கு முன்பு கிரிகர் மெண்டலுக்கு சிறிய அங்கிகாரம் கிடைத்திருக்குமாயின், இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சி இதைவிட பன்மடங்காயிருக்கும்.. ஆனால் முடனம்பிக்கையாலும், நிராகடிப்பாலும் ஒரு தனிமனிதனின் உழைப்பு பின்தாங்க வைத்தது....

(படித்ததில் பிடித்தது)
.

No comments:

Post a Comment