Saturday, September 28, 2013

vanavil (Blind faith)

வானவில் உண்மையில் அர்ஜுனன் விட்ட வில்லா..? (மூட நம்பிக்கை)

பொதுவாக மழை பெய்து கொண்டிருக்கும் போது வானவில் தோன்றுகிறது. அதை பார்த்த நாம் அர்ஜுனன் போடு வில் என்கிறோம். அப்படிதான் நம் முன்னோர் பலர் நம்மை  நம்ப வைத்துள்ளனர். இது எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை.

வானவில் எப்படி, எப்போது தோன்றுகிறது..?
----------------------------------------------------------------------------
1.வானவில் சூரியனுக்கு எதிர் திசையிலேதான் தோன்றும்.
(காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் தோன்றும்.)

2.வானவில் தோன்றும் திசையில் கருமேகம் இருக்க வேண்டும் அல்லது மழை பெய்து கொண்டிருக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, இந்த வானவில்லிற்கு மேலே துணை வானவில் ஒன்று தோறும். இந்த வானவில் தெளிவற்றதாகவும், பிரதான வானவில்லின் வர்ணங்களின் வரிசைக்கு எதிர்மாறாகவும் இருக்கும். சூரிய ஒளி இருமுறை பூரண எதிரொளித்தால் இந்த வானவில் தோன்றுகிறது. இதுவே வானவில் தோன்றும் விதம் ஆகும்.

உதரணமாக காலையில் 8 அல்லது 9 மணியளவில் சூரிய ஒளி படக்கூடிய இடத்தில் மேற்க்கு நோக்கி நின்று கொண்டு, வாயில் தண்ணீரை ஊற்றி, பின் 'ப்பூ' என்று துப்பினால் அந்த நீர்த்திவலைகளில் வானவில் தோன்றும். அங்கு உண்மையில் அர்ஜுனன் தான் உங்கள் வாய் வழியாக வில் விட்டு வானவில் வந்ததா..!!? இது எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை..

அர்த்தமுள்ள நம்பிக்கைகளை நம்புவோம்..
அர்த்தமற்ற மூடநம்பிக்கைகளை மறப்போம்...

அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி
.
.

Thursday, September 26, 2013

தீ மிதித்தல் (ஒரு மூடநம்பிக்கை)


தீ மிதி தத்துவம் (ஒரு மூடநம்பிக்கை)

காலம் காலமாக இந்து மதத்தில் கடவுள்களுக்கு தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றும் பலக்கம் உள்ளது...அதாவது ஒரு இடத்தில் நெருப்பு துண்டை பரப்பி வைத்து, அதன் மீது நடந்து அல்லது ஓடியோ செல்வார்கள்.. இதற்க்கு பூ மிதித்தல் என்று பெயர்.
தீ மிதிப்பத்ற்க்கு முன்பு தீக்குழியில் சில ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சமமாக வெட்டப்பட்ட ஒரு குழியில் (குழியின் ஆழம் குறைவாக கூட இருக்கலாம்) விறகு கட்டைகளை அதில் போட்டு எரிப்பார்கள். கட்டை நன்றாக வெந்து தணலாக மாறிய பிறகு அவற்றை அடித்து நொறுக்கிச் சமப்படுத்துவார்கள். அதாவது நெருப்பின் மேல்மட்டம் மேடுபள்ளம் இல்லாமல் சமப்படுத்தப்படும். பிறகு முறத்தால் விசிறி நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள்.
சாம்பல் அகற்றப்பட்டு, நெருப்புத் தணலாகச் சமப்பரப்பில் இருக்கும் நிலையில், பக்தர்கள் அதன்மீது விரைந்து வேகமாக நடந்து வெல்வார்கள்... 

நெருப்புக்குழியில் வேகமாக வேகமாக விரைந்து நடப்பதால் காலில் அதிக சூடு ஏறுவதில்லை. ஒரு நெருப்பு துண்டை உள்ளங்கையில் போட்டு இந்தக்கைக்கும் அந்தக்கைக்கும் விரைவாய் மற்றினால் நெருப்பு சுடாது.. அது ஒரே கையில் நிலையாக இருந்தால் சுட்டு விடும். எனவே, நெருப்பில் விரைந்து நடக்க வேண்டும்.

மேலே முறத்தால் விசிறி நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள் என்று கூறினேன். மென்மையான சாம்பலை நீக்காமலும் நெருப்பை சமமாக பரப்பாமலும், மெதுவாக நெருப்பில் நடந்து யாரும் தீ மிதிக்க முடியாது.
உதாரணமாக அடுப்படியில் பெண்கள் நெருப்பு துண்டை விரலால் எடுத்து போடும்போது தணலாக இருக்கும் நெருப்பை தான் எடுத்து போடுவார்களே தவிர நீறுபூத்த நெருப்பை (மேலே சாம்பல் படிந்த நெருப்பு துண்டை) விரலால் எடுக்கமாட்டர்கள். காரணம்...!!!?

நீறுபூத்த நெருப்பின் மீது உள்ள வெண்ணிற மென்மையான சாம்பல் அதிகச் சூட்டுடன் இருக்கும். அதை தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும். இது விரலை சுட்டுக் கொப்பளிக்க செய்துவிடும், சாம்பல் படிந்த நெருப்பு துண்டை விரைவாக விரலால் எடுத்து போட்டாலும் சுட்டுவிடும். எனவே நீறுபூத்த விரலால் எடுக்க முடியாது. நீறுமடியாத (சாம்பல் படியாத) தணலான நெருப்பு துண்டை விராலால் எடுக்கமுடியும். எனவேதான் தீக்குழியில் உள்ள நெருப்பு துண்டில் உள்ள சாம்பலை அகற்றுகிறார்கள்.

அடுததாக ஒரு சின்ன விசயம். ஏன் மரத்துண்டுகளை எரித்து அதன் மீது ஏரி நடக்க வேண்டும்.. ஒரு நல்ல இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி அதன் மீது நடக்க வேண்டியது தான... காரணம் மரக்கட்டை வெப்பத்தை மெதுவாக கடத்து.. ஆனால் இரும்பு வேகமாக கடத்தும்.. உடனே நமது தோலும் அதன் மீது ஒட்டிக்கொள்ளும்.

இப்படி இருக்கையில் இதை கடவுள் அருள் என்று எப்படி உங்களால் நம்பமுடிகிறது.. இது போன்ற கண்மூடித்தனமான மூடதனமான நம்பிக்கைகளை அழிக்க வேண்டும்...

பூக்குழி என்று... தீக்குழியில் இறங்கும் பக்தர்களே...!!!

இது உண்மையில் உங்கள் கடவுளின் அருளா..?

ஒரு சிறு கேள்வி…
------------------------
எல்ல கோவில்களிலும் இருக்ககூடிய பாப்பனர்கள் (ஐயர்) எங்காவது...

தீ மிதிச்சி பாத்திருகிங்கலா..?
அலகு குத்தி பாத்திருக்கிங்கலா...?,
தீச்சட்டி துக்கி பாத்திடுக்கிங்கலா...?
சாமி ஆடியாவது பாத்து இருக்கிங்கலா...?

உண்மையிலேயே கோவிலுக்குள் இருப்பது கடவுள் தான், கல் இல்லனு சொல்லி சாசு சம்பாதிக்குர அவங்க ஏன் இத பன்னமாட்டேங்குறாங்க... ?

இதுக்கு தான் அப்பவே நம்ம பெரியார் சொன்னார்

"பக்தி வந்தால் புத்தி போய்விடும்,
புத்தி வந்தால் பக்தி போய்விடும் "

என்று
அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி...
.
.

காலம் காலமாக இந்து மதத்தில் கடவுள்களுக்கு தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றும் பலக்கம் உள்ளது...அதாவது ஒரு இடத்தில் நெருப்பு துண்டை பரப்பி வைத்து, அதன் மீது நடந்து அல்லது ஓடியோ செல்வார்கள்.. இதற்க்கு பூ மிதித்தல் என்று பெயர்.
தீ மிதிப்பத்ற்க்கு முன்பு தீக்குழியில் சில ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சமமாக வெட்டப்பட்ட ஒரு குழியில் (குழியின் ஆழம் குறைவாக கூட இருக்கலாம்) விறகு கட்டைகளை அதில் போட்டு எரிப்பார்கள். கட்டை நன்றாக வெந்து தணலாக மாறிய பிறகு அவற்றை அடித்து நொறுக்கிச் சமப்படுத்துவார்கள். அதாவது நெருப்பின் மேல்மட்டம் மேடுபள்ளம் இல்லாமல் சமப்படுத்தப்படும். பிறகு முறத்தால் விசிறி நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள்.
சாம்பல் அகற்றப்பட்டு, நெருப்புத் தணலாகச் சமப்பரப்பில் இருக்கும் நிலையில், பக்தர்கள் அதன்மீது விரைந்து வேகமாக நடந்து வெல்வார்கள்... 

நெருப்புக்குழியில் வேகமாக வேகமாக விரைந்து நடப்பதால் காலில் அதிக சூடு ஏறுவதில்லை. ஒரு நெருப்பு துண்டை உள்ளங்கையில் போட்டு இந்தக்கைக்கும் அந்தக்கைக்கும் விரைவாய் மற்றினால் நெருப்பு சுடாது.. அது ஒரே கையில் நிலையாக இருந்தால் சுட்டு விடும். எனவே, நெருப்பில் விரைந்து நடக்க வேண்டும்.

மேலே முறத்தால் விசிறி நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள் என்று கூறினேன். மென்மையான சாம்பலை நீக்காமலும் நெருப்பை சமமாக பரப்பாமலும், மெதுவாக நெருப்பில் நடந்து யாரும் தீ மிதிக்க முடியாது.
உதாரணமாக அடுப்படியில் பெண்கள் நெருப்பு துண்டை விரலால் எடுத்து போடும்போது தணலாக இருக்கும் நெருப்பை தான் எடுத்து போடுவார்களே தவிர நீறுபூத்த நெருப்பை (மேலே சாம்பல் படிந்த நெருப்பு துண்டை) விரலால் எடுக்கமாட்டர்கள். காரணம்...!!!?

நீறுபூத்த நெருப்பின் மீது உள்ள வெண்ணிற மென்மையான சாம்பல் அதிகச் சூட்டுடன் இருக்கும். அதை தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும். இது விரலை சுட்டுக் கொப்பளிக்க செய்துவிடும், சாம்பல் படிந்த நெருப்பு துண்டை விரைவாக விரலால் எடுத்து போட்டாலும் சுட்டுவிடும். எனவே நீறுபூத்த விரலால் எடுக்க முடியாது. நீறுமடியாத (சாம்பல் படியாத) தணலான நெருப்பு துண்டை விராலால் எடுக்கமுடியும். எனவேதான் தீக்குழியில் உள்ள நெருப்பு துண்டில் உள்ள சாம்பலை அகற்றுகிறார்கள்.

அடுததாக ஒரு சின்ன விசயம். ஏன் மரத்துண்டுகளை எரித்து அதன் மீது ஏரி நடக்க வேண்டும்.. ஒரு நல்ல இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி அதன் மீது நடக்க வேண்டியது தான... காரணம் மரக்கட்டை வெப்பத்தை மெதுவாக கடத்து.. ஆனால் இரும்பு வேகமாக கடத்தும்.. உடனே நமது தோலும் அதன் மீது ஒட்டிக்கொள்ளும்.

இப்படி இருக்கையில் இதை கடவுள் அருள் என்று எப்படி உங்களால் நம்பமுடிகிறது.. இது போன்ற கண்மூடித்தனமான மூடதனமான நம்பிக்கைகளை அழிக்க வேண்டும்...

பூக்குழி என்று... தீக்குழியில் இறங்கும் பக்தர்களே...!!!

இது உண்மையில் உங்கள் கடவுளின் அருளா..?

ஒரு சிறு கேள்வி…
------------------------
எல்ல கோவில்களிலும் இருக்ககூடிய பாப்பனர்கள் (ஐயர்) எங்காவது...

தீ மிதிச்சி பாத்திருகிங்கலா..?
அலகு குத்தி பாத்திருக்கிங்கலா...?,
தீச்சட்டி துக்கி பாத்திடுக்கிங்கலா...?
சாமி ஆடியாவது பாத்து இருக்கிங்கலா...?

உண்மையிலேயே கோவிலுக்குள் இருப்பது கடவுள் தான், கல் இல்லனு சொல்லி சாசு சம்பாதிக்குர அவங்க ஏன் இத பன்னமாட்டேங்குறாங்க... ?

இதுக்கு தான் அப்பவே நம்ம பெரியார் சொன்னார்

"பக்தி வந்தால் புத்தி போய்விடும்,
புத்தி வந்தால் பக்தி போய்விடும் "

என்று
அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி...
.
.

Tuesday, September 24, 2013

cadaver transplant programme (உறுப்பு தானம்)

உறுப்பு தானம்...
உயிர்களை காக்கும்...

         நாம் இறந்த பின்பு நம் உடலை சாஸ்த்திரம் சடங்கு என்ற பெயரில் தீயில் எரித்தோ.. அல்லது பூமியில் புதைத்தோ இறுதி காரியத்தை முடிக்கிறோம்... தீயில் எரிக்கும் போதும்.. பூமியில் புதைத்தபின்பு கரயான் நம்மை அரிக்கும் போதும் நமக்கு வலிக்க போவதும் இல்ல... நமக்கு என்ன நடக்குதுங்றதும் தெரிய போவதும் இல்ல...

        இன்று உலகத்துல எத்தனையோ பேருக்கு உடல்ல பாதிப்பு ஏற்படுகிறது... கண் தெரியாதவர்கள்.. சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம் என உடல் உறுப்புகளில் பாதிதவர்கள் என பலர் உள்ளனர்... அவர்களுக்கு நாம் இறந்தபின்பு நம் உறுப்புகளை தானமாக அளிப்பதால் நாம் இறந்த பின்பும் உயிர் உயிர்வாழ வழிவகுக்கிறது...
-------------------------------------------------------------------------
1. நாம் எந்த உறுப்புகளை கொடை அளிக்கலாம்/பெறலாம்/உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.?

  சிறுநீரகம், இதயம், கல்லீரல்,நுரையீரல், கணையம், சிறுகுடல் ஆகிய உறுப்புகளை தானம் செய்யலாம்..
-------------------------------------------------------------------------
2. திசு கொடை என்றால் என்ன?
     
        அறுவை சிகிச்சை மூலமாக முழு உறுப்பையும் மாற்றாமல் கண்ணின் கருவிழி (கார்னியா), தோல், எலும்பு, தசைநாண் (tendons), சவ்வு (cartilage) இதய தடுக்கிதழ்(heart valves) போன்ற ஒரு சில திசுக்களை மாற்றும் தானமாக பெற்று மற்றவருக்கு பொருத்துவது திசு கொடையாகும்.

         வெற்றிகரமான முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை 1905ல் நடந்தது. தற்சமயம் வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையை திரும்ப பெறுகிறார்கள்.
எலும்பு, தசை நாண், சவ்வு ஆகியவற்றின் மூலம் விபத்தினால் அல்லது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெறுகிறார்கள். எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையையோ, காலையோ வெட்டி எடுக்க வேண்டிய அவசியம் எலும்பு கொடை மூலம் குறைகிறது..
     
        பிறக்கும் போதே உடல் ஊனத்துடன் பிறந்த குழந்தைகள் மற்றும் இதயத்தில் பிற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இதய தடுக்கிதழ் மாற்று சிகிச்சை பலனளிக்கிறது.

       தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் கொடை பலனளிக்கிறது.

       திசு கொடை என்பது உறுப்பு கொடையை விட எளிதனது. ஒருவர் இறந்து 48 மணி நேரம் ஆனாலும் கூட திசுகொடை அளிக்கலாம்.

       இனப்பெருக்க உறுப்புகள் மட்டும் திசுகொடை மூலம் பெறப்படுவதில்லை…
-------------------------------------------------------------------------
3. உறுப்பு கொடை அளிக்க சம்மதித்த ஒருவர் விபத்தில் சிக்கினால் அவருக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்களா..?

       இல்லை. எந்த நோயாயாளியின் உயிரை காப்பதே மருத்துவரின் முதல் பணி. அனைத்துவித சிகிச்சை செய்தும், பலனில்லாமல் மூளை சாவு ஏற்பட்டாள் உறுப்பு கொடை அளிக்கப்படும்.
-------------------------------------------------------------------------
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக்கல்லுரியை அனுகவும்..

சென்னையில் உள்ளவர்கள்..
CADAVER TRANSPLANT PROGRAMME TAMIL NADU
165 A, Tower Block  I, 6th floor, (Next to Bone Bank)
Rajiv Gandhi Govt. General Hospital, Chennai - 600 003
Email - organstransplant@gmail.com
Phone - 91 44 2530 5638
Tele Fax - 91 44 2536 3141
http://www.dmrhs.org

Sunday, September 15, 2013

POSITIVE JANA

POSITIVE JANA சிறு வயதில் ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்த போதிலும், தனது வாயின் உதவியால் பல ஓவியங்களை வரைந்து சாதனை படைத்தவர். மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல ஓவிய போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர். அதுமட்டும் இன்றி டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் கையினால் இரண்டு தேசிய விருது வாங்கியவர். (1. BEST CREATIVE CHILD AWARD, 2. BALA SRI AWARD )
ஜெர்மனியில் உள்ள MOUTH AND FOOT PAINTER ASSOCIATION என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ள இவருடைய ஓவியத்தை அந்த அமைப்பு கடந்த ஆண்டு 2012 ஏப்ரல் மாதம் நடத்திய ஓவிய கண்காட்சியில் இவருடைய  ஓவியங்களை இடம்பெறச்செய்துள்ளாது. இவருடைய முயற்ச்சி வருங்கல மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு பாட திட்ட புத்தகதில் இவரை பற்றி வந்திருப்பது பெருமை படகூடிய விசயம். இத்தனை பெருமைக்குரிய நம் ஜனா அவர்கள் 2008 ஆண்டு முதன் முரையாக தனது வாயின் வ்தவியால் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றியும் பெற்றுள்ளார். பின்பு லையோலா கலேஜில் VISUAL EFFECT படித்து முடித்து புதிய தலைமுறை பத்திரிக்கையில் VIRTUAL SET DESIGNER ஆக பனிபுரியும் இவருக்கு வயது 21 என்பது ஆச்சர்ய பட வேண்டிய விசயம்.
மேழும் விவரங்களுக்கு
positivejana.webs.com
positivejana.com

Tuesday, September 10, 2013

டிஜிடல் பேனர் கலாச்சாரம்

டிஜிடல் பேனர்

சமீப காலமாக நம்ம மாநிலத்துல ஒரு கலாச்சாரம் பயம்க்கரமா பரவிகிடக்குது…!!  அதாவது எந்த ஒரு நல்ல காரியம்னாலும், அரசியல் விளம்பரம்னாலும் டிஜிடல் பேனர் வைப்பது, அதிலும் கல்யாண வீட்டில் அடிக்கும் பேனர் வித்யாசமானது...  அதுல ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளை பெருமையா எழுதியிருப்பாங்க...

அது…!!!

"எங்க குல இல்ல திருமண விழா"

இதுல ஒரு குறிப்பிட்ட சாதி பெயரும் இடம் பெற்றிடுக்கும்... கூடவே ஒரு தலைவரேட புகைபடம் இடம் பெற்றிடுக்கும்...

இந்த டிஜிடல் பேனர்ல இடம் பெறுவதற்கு அந்த தலைவருக்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி….!!   "அவர் அந்த சாதியில பிறந்திருக்க வேண்டும்"

இதுல ஒரு சின்ன உண்மை என்னன்னா…?
தன்னுடைய சாதிகாரர்னு அவங்க பெருமையா  தலைவரேட புகைபடத்த போட்டுகிறாங்க…!! ஆனா இத பாக்குர மத்த சாதிகார பயலுக என்ன நினைக்குறாங்க தெரியுமா..?

" இந்த தலைவர்களாம் இன்ன சாதிக்காரங்கானு, மத்த சாதிகார பயலுகளுக்கு பிடிக்காமலேயே போய்ருது…!  அது மட்டும் இல்லைங்க.. அவங்க நாட்டுக்காக உழைச்சாங்கலா, இல்ல சாதிக்காக உழைச்சாங்கலானு பெரிய சந்தேகமே அந்த இடத்துல வருது…!! "

பல மக்கள் சேர்ந்ததுதான் ஒரு நாடு.. அந்த நாட்டு சுதந்திரத்துக்கக பாடுபட்ட நம் முன்னோர்கள் உண்மையில் நம் மனதில் வழவில்லை... டிஜிடல் பேனர்லையும், போஸ்டர்லையும் தான் வழ்ந்துக்கிட்டு இருக்காங்க...?

சத்தியமா நான் ஒன்னே ஒன்னு சொல்லிகிறேன்...
"இந்த தலைவர்கள்கலாம் இப்ப உயிரேட இருந்தா... இந்த சாதி வெறி பிடிச்ச மக்களுக்கா... நாம போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தோம்னு காரி துப்புவாங்க..?


Monday, September 9, 2013

மதத்தை பரப்புவதற்கு இது பொது இடமோ அல்லது கோவிலோ இல்லை..

உங்க சொந்த விசயங்களை பற்றி எழுத இந்த இடம் உங்க “சொந்த டைரி” இல்ல.. “பொது கழிப்பிடம்”...
______________

சமீபத்தில்  Train ல போய்ட்டு இருக்கும் போது அவசரதுக்கு Toilet உள்ளே போகும் போது அங்கு இருந்த வார்த்தைகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது....

கடவுள் இருக்கார்... அல்லது  இல்லை என்பது வேற விசயம்...!!

கடவுள் தூன்லயும் இருப்பார்... துரும்புலையும் இருப்பார்னு யாரே சொன்னதுக்கு, இந்த இடத்துல இப்படி எழுதுரது புத்திசாலிதனம் இல்ல...!!!

இத்தனை நாள் தங்களுக்கு வேண்டாதவர்களை பற்றிதான் ... இந்தமாதிரி இடதுல எழுதுனாங்க... ஆனா இப்ப...!!

உங்க சொந்த விசயங்களை பற்றி எழுத இந்த இடம் உங்க “சொந்த டைரி” இல்ல.. “பொது கழிப்பிடம்”...

தப்பா எதாவது எழுதி இருந்தா மன்னிச்சிடுங்க... இல்லன கெட்ட வார்தையால என்ன திட்டிருங்க....

மதத்தை பரப்புவதற்கு இது பொது இடமோ அல்லது கோவிலோ இல்லை..

by spark MRL.K

மூட நம்பிக்கைகள்

இன்று சமுகதில் எத்தனையோ மூட நம்பிக்கைகள் பரவி கிடக்குது... அது எப்படி வந்தது என்று நம்மல்ல நிறையா பேருக்கு தெரியாது... ஆனா அந்த காலத்துல அது ஏதோ ஒரு காரணமாகத்தான் நம் முன்னோர்கல் வச்சிருக்காங்க... அதற்க்கு உதாரணமாக நான் என் நண்பன் வாயிலாக தெரிந்த ஒரு சிறு கதையை சொல்ல விரும்புகிறேன்....

ஒரு காலத்துல ஒரு முனிவர் இருந்தார்... அவருடைய குருகுலதில் சில சீடர்களும் இருந்தாங்க... தினமும் காலையில் அவர்கள் தியானம் செய்வது வழக்கம்... அப்படி ஒரு நாள் தியானம் செய்யும் போது ஒரு பூனை உள்ளே வந்து அவர்களுக்கு இடையூர் செய்து கொண்டிருந்தது... அப்ப குரு (முனிவர்) சொன்னார்.. தினமும் ஒருவர் அந்த பூனையை தியானம் செய்யும் போது அந்த ஜன்னலில் கட்டிவிடுங்க, அப்படியே அதுக்கு குடிக்க பால் கொஞ்சம் ஊத்திருங்கனு சொன்னாரு... அதன்படி தினமும் யாரவது ஒரு சீடர் கட்டிபோட்டு பால் ஊத்திகிட்டு இருந்தாங்க... ஒரு நாள் அந்த குரு இறந்து போய்ட்டார்... சில நாள் கழித்து அவருக்கு பதிலாக புதிதாக ஒரு குரு வந்தார்.. வழக்கம் போல தியானம் நடைபெருகிறது... அந்த பூனைக்கு தினமும் ஒருவர் கட்டி போட்டு பால் ஊத்திக்கிட்டு இருந்தாங்க... ஒரு நாள் அந்த பூனை இறந்து போய்விட்டது... அப்ப அந்த குரு சீடர்களை பார்த்து சொந்னார்... தினமும் கட்டி போடுவதர்க்கு புதிதாக ஒரு பூனை வாங்கி வாருங்கள் என்று...

அது தான் இன்றைய மூட நம்பிக்கை... அன்று ஒரு விசயம் சொன்னங்கன, அதுல ஒரு அர்த்தம் இருந்தது... ஆனா இன்று அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்டது... இன்றும் அதை காரணம் இல்லாமல் கடைபிடிப்பது முட்டாள் தனம்...

உதாரணமாக 6 மணிக்கு மணிக்கு மேல் பணம் தரமாட்டேன் என்று சொல்லுவது... கடைக்கு சென்றால் துணி தைப்பதற்க்கு பயன்படும் ஊசி தரமாட்டேனு சொல்லுரது.. காரணம் கேட்டால்... 6 மணிக்கு மேல் தந்தா தனலட்சுமி வீட்டில குடிருக்க மாட்டாலாம்... அந்த காலத்துல விளக்கு வெளிச்சத்துலதான் வாழ்க்கை.. அதனால பணம் கொடுக்கும் போது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொடுதுருவோம்... அனா இப்ப இரவை பகலாக மாற்றும் அளவுக்கு மின்சார விலக்கு வந்து விட்டது... ஆன இப்ப ஏன் அதை கடைபிடிக்கனும்.. இது மாதிரி காரணமே இல்லாத பல விசயங்கள் நம்மில் புதந்துள்ளது... இதை மற்றி அமைத்தால் வாழ்க்கை செளிப்பாக அமையும்....
by spark MRL.K

தமிழ் நாட்ல தமிழ்ல பேசுனா தப்பில்லைங்க...!!!


திருநங்கை


தொடர்வண்டி, பேருந்து நிலையம் போன்ற இடத்துல பிச்சை எடுத்த நிலை போய்..  சமீபத்தில் பார்ல பல ஆண்களுக்கு மத்தியில் பிச்சை எடுக்குற நிலை...
ஆமா... ஒரு சின்ன சந்தேகம்..

"ஒன்பது.. ஒன்பது... சொல்லுரிகலே ஏன்..?"

ஒன்பதுங்றது பத்துக்கும் எட்டுக்கும் நடுவுல இருக்குறதுனாலயா..??
ஏன் அப்படினா…
ஆறும் தான் நலுக்கும் ஐந்துக்கும் நடுவுல இருக்கு...

ஒன்பது கட்டத்த போட்டு, ஒன்பது கிரகத்தோட பேர எழுதி ஜோசியம் பாக்க தெரியுது…!!
எதாவது பிரச்சினைனா ஒன்பது கிரகத்தை சுத்தி சுத்தி சாமி கும்பிட தெரியுது..!!
ஆனா... இவ்வளவு மதிப்புள்ள எண்ணை திட்டுரதுக்கு பயண்படுத்துறோம்.. !

இதுவரைக்கும் ஆண், பெண் என இரண்டாக இருந்தா நாம்.. ஆண், பெண், திருநங்கை என மூன்றாக மாறினா என்ன..?
இரண்டு மூன்றாகலாம் தப்பில்லை.. இரண்டு ஒன்றாக மாறுனாதான் தப்பு..?

அவங்க பிறந்தது அவங்க தப்பா..?

நாம் நம்ம சந்தோசத்துக்கு குழந்தைய பெற்றுவிட்டு... பலியை அவங்க போடுறதுக்கு பெயர் நம் கல்லசாரம்...
by spark MRL.K