Thursday, October 17, 2013

ஆடு மாடுகளை கடவுளுக்கு பலியிடும் முறை


ஆடு மாடுகளை கடவுளுக்கு பலியிடும் முறை எப்படி தோன்றியது...??
poo
நாம் குரங்குகளாக ஒரு காலத்தில் காட்டில் அலைந்து கொண்டிருந்தோம். முன்னங்கால்களை தூக்கிப் பிறகு நட்டமாக நடக்கத் துவங்கினோம். முன்னங்கால்கள் இரண்டும் பிறகு கைகளாகிக் கீழே தொங்கின. கைகளே இல்லாத காலத்தில் கையெடுத்து கும்பிட சாமிகளும் பூமியில் இல்லை. சாமியில்லாத பூமியில் ரொம்ப காலம் மனிதர்கள் வாழ்ந்தார்கள். பின்னர் கூட்டம் கூட்டமாக இனக்குழுக்களாக வாழத் துவங்கினார்கள்.

வேட்டையாடிச் சாப்பிட்ட காலம் அது. மனித மூளை இப்போது இருப்பது போல அவ்வளவு சுறுசுறுப்பாகவும் கூர்மையாகவும் வளர்ச்சி பெறாத காலம். கைகளை பயன்படுத்தி மனிதன் உழைக்கத் துவங்கினான், கைகளின் உழைப்பால் நரம்பு மண்டலத்தின் தலைமைச் செயலகமான மூளை என்கின்ற உறுப்பு உருவானது. இயற்கையோடு இயற்க்கையாக மனிதர்கள் வாழ்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை சுற்றி நடப்பதை கவனிக்கத் துவங்கினார்கள். மெல்ல மெல்ல மூளை வேலை செய்கிறது. சிந்தனை, உணர்வு எல்லாம் வளர்கிறது.

அப்போது காடுகளில் மலைகளில் நீர் கிடைக்கும் இடங்களை சுற்றித்தான் வாழ்க்கை. பூச்சிக்கடிகளுக்கு நடுவே அப்பாவிகளாக மனித வாழ்க்கை துளிர் விட்டது. அந்த காடு திடீரென தீப்பற்றி எரியும். விலங்குகளும் மனிதர்களும் பதறி ஓடுவார்கள். மின்னல் வெட்டியதால் தீப்பிடித்தது. மின்னல் மேலே வானத்திலிருந்து வந்தது. நாள் கணக்கில் காடுகள் எரிந்துகொண்டே இருக்கும். மனிதர்களால் காட்டுத்தீயை அணைக்க முடியுமா..? அதுவும் அந்தகாலத்தில். பின்னர் இடிச்சத்தம் கேட்கும். அதுவும் மேலேதான். மழை பெய்யும். பல நாள் விடாமல் பெய்யும் மழையில் தான் காட்டு தீ அணையும். மழையும் மேலே இருந்துதான் வந்தது. பகலில் சூரியன் சுட்டெரிக்கிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது. இரவில் நிலா ஒளி தருகிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது.

நல்லது கெட்டது எல்லாமே மேலே இருந்துதான் வருகிறது என்று அன்றைய மனிதன் நினைத்தான். ஆகவே மேலே ஏதோ சக்தி இருப்பதாக அவன் கற்பனை செய்தான். அன்றைய மனிதர்கள் அந்த சக்தியை சமாதானப்படுத்தி நல்லதை மட்டும் கீழே அனுபினால் போதும் என்று சொல்ல ஆசைப்பட்டர்கள். சமாதனப்படுத்துவது எப்படி என்பது அடுத்த பிரச்சினை. அன்றை மனிதர்கள் மிருகங்களை சாமாதனப்படுத்த தங்களிடம் இருந்த ஆடு மாடுகளை தூக்கி போடுவார்கள். அந்த மிருகம் ஆடுமாடுகளை தின்று சமாதானமாகி விடும்.

அதே பாணியில் மேலே இருக்கும் சக்தியை சமாதானப்படுத்த ஆடுகளை தூக்கி கொண்டு உயரமான மலை உச்சிகளுக்குப் போனார்கள். உலகமெங்கும் மலைகளில் சாமி கோவில்கள் இருப்பதன் ரகசியம் புரிகிறதா..? ஆனால் மலைக்குப் போனாலும் வானம் எட்டவில்லை. என்னடா செய்யிறது என்று மலையில் நின்று யேசித்தார்கள். காடுகள் எரிந்து புகை மேலே போவதைப் பார்த்தார்கள். ஆகவே ஆடு மாடுகளை தீயில் போட்டு எரித்தார்கள். அதன் புகை மேலே வானத்துக்கு போனது. சரி மேலே உள்ள சக்தி சமாதானமாகி நல்லது செய்யும் என்று இவர்கள் சமாதனப்படுவார்கள்.

அப்படியே நடந்து கொண்டிருந்தது. பின்னர் ஒருநாள் நீங்க அனுப்புற புகை மேலே உள்ள சக்திக்காக நீங்க அனுப்புறதுதான் என்பது அந்த சக்திக்கு எப்படி தெரியும்..? என்று ஒருவன் கேள்வியை போட்டான். மக்களுக்கு குழப்பமாகி விட்டது. அப்போ என்ன செய்யிறது..? என்று அவனிடமே கேட்டார்கள். அப்படி வாங்க வழிக்கு என்று சந்தோசத்துடன் அவன் ஒரு வழி சொன்னான். மேலே உள்ள சக்திக்கு புரிகிற மொழி எனக்கு தெரியும். நீங்க ஆடு மாடுகளை தீயில் போடும் போது நான் அந்த மொழியில் " சுக்லாம் பரதம். யதா.. ததா.. " என்று மந்திரம் சொல்லுவேன். அப்பதான் மேலே உள்ள சக்திக்கு புரியும். எனக்கு அதுக்கு உண்டான சன்மானத்தை கொடுத்தா போதும் என்று சொன்னான். ஜனங்கள் ஒப்புக்கொண்டார்கள். பிறகு மந்திரம் சொல்லி ஆடு மாடுகளை தீயிட்டுக் கொளுத்தும் சடங்காக அது மாறியது. அதற்கு யாகம் என்று பெயர் வந்தது. அந்த வழிபாட்டு முறைக்கு "பிராமண மதம்" என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது. ரொம்ப காலம் இது ஓடிக்கொண்டிருந்தது.

காலப்போக்கில் மனிதர்கள் விவசாயத்தை கண்டுபிடித்தார்கள். உண்மையில் பெண்கள் தான் விவசாயத்தை கண்டு பிடித்தார்கள். விவசாயத்தை கண்டுபிடிப்பதற்க்கு முன்னால் வேட்டையாடுதல் முடிந்து ஆடுமாடுகளை வளர்க்கும் மேய்ச்சல் காலம் இருந்தது.

விவசாயம் செய்ய ஆடுமாடுகள் ரொம்ப முக்கியமாகத் தேவைப்பட்டன. நிலத்தை உழுவதற்க்கும் தேவை. சாணம் போட்டு நிலத்தை பண்படுத்தவும் தேவை. ஆகவே அப்படி இருக்கிற ஆடுமாடுகளை எல்லாம் தீயில் போட்டு கொளுத்துகின்ற மதம் சரியில்லை. இப்போது சரிப்பட்டு வராது என்று விவசாயிகள் முடிவு செய்தார்கள்.

ஆடு மாடுகளை கொளுத்துகிற சாமி வேண்டாம். ஆடுமாடுகளை காப்பாத்துகின்ற சாமிதான் இப்போது தேவை என்று முடிவு செய்து புதுசாக சாமிகளை உண்டாக்கினார்கள்.

மேல் நாடுகளில் யேசு கிறிஸ்துவை நல்ல மேய்ப்பாளராக உருவாக்கினார்கள். நம் நாட்டில் புல்லாங்குழல் ஊதி மாடுகளை மேய்கிற கிருஷ்ண பகவானை உண்டாக்கினார்கள். இதனால் கிறிஸ்துவ மதமும் வைஷ்ணவ மதமும் தோன்றின.

By
Spark MRL.K
சாமிகளின் பிறப்பும் இறப்பும் புததகத்திற்கு (" துளிர்" அறிவியல் மாத இதழ்) எனது நன்றி...

Tuesday, October 15, 2013

dewali festival (தீபாவளி பண்டிகை)

தீபாவளி பண்டிகை..

ஆண்டிற்க்கு ஒரு முறை இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை... புதிதாக கல்யாண்ம் பன்னிக்கிட்டவங்க தலை தீபாவளி கொண்டாடுவாங்க.. சிலர் தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்வாங்க... எங்கு பார்தாலும் பகல் முழுவதும் ஒரே வெடி சத்தம்.. இரவு முழுவதும் வான வேடிக்கை..  அன்று பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் அழுவலகம், தொழிற்சாலை என அனைத்தும் விடுமுறை.. ஆனால் இப்படிபட்ட தீபாவளி எப்படி வந்தது, ஏன் கொண்டாடுகிறோம் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்..!!!???

தீபாவளி கொண்டாடுவதற்க்கு பெரியவங்க சொல்கின்ற காரணம்... நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவனை திருமால் அழிச்சுட்டாரு.. அவன் இறந்த நாளை நாம் கொண்டாடும் விதமாக தீபாவளி கொண்டாடுறோம்னு சொல்லுவாங்க... இததான் எல்லாரும் நம்பி கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.. ஆனாம் இது உண்மை அல்ல...!!!

தீபம்+ஆவளி = தீபாவளி

ஆவளி என்றால் வரிசை.

தீபாவளி என்றால் தீபவரிசை அல்லது விளக்கு வரிசை என்பது பொருள்.

இதில் நரகாசுரன் வதத்திற்க்கும் தீபாவளி என்ற பெயருக்கும் என்ன சம்பந்தம்.. யாரவது யோசிச்சு பர்க்கிறோம...?

சமணத் துறவி 24 வது தீர்த்தங்கரர் சீடர்களுக்கு போதித்து கொண்டிருந்த போது, விடியற்காலைப் பொழுதில் அப்படியே இறந்து போனார்.

அவரது சீடர்கள் இருபுறமும் விளக்குகளை வரிசையாக ஏற்றி, அவரை வழிபட்டனர். அதுவே தீபாவளி.

பொங்கலைச் சங்கராந்தி என்று ஆக்கியது போல, சமணப் பண்டிகையை இந்து பண்டிகை ஏன்று ஆக்கிவிட்டோம்.

சரி நரகாசுரன் என்பவன் யார்..?
அவன் இறப்பால் என்ன லாபம்..?
அதற்கு எதற்கு விழா..?

அதர்மத்தை தர்மம் அழிக்கும் என்ற தத்துவத்தை இப்பண்டிகை உணர்த்துவதாக வேண்டுமானால் கொள்ளலாம்.

அதற்குப் பண்டிகை கொண்டாடி என்ன பயன்..? இயக்கம் நடத்தி அதர்மத்தை அழித்தாலாவது சமுதாயத்திற்க்கு நலன்பயக்கும்.

அதை விட்டு விட்டு, பட்டாசு கொளுத்திப் பலகாரம் சாப்பிட்டால் சரியாய் போய்விடுமா..?
"காசை கரியாக்குதல்" என்பார்களே அதற்கு தீபாவளி தான் சரியான உதாரணம்.

இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில், அன்று பட்டாசும், வாணமும், மத்தாப்பும் கொளுத்துவதால் எந்த அளவுற்க்கு காற்று மாசுபடுகிறாது தெரியுமா..? இந்தியா பரப்பே அன்று புகை மண்டலமாக காட்சி அளிக்கும். அதனால் எவ்வளவு நோய் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் இதனால் எத்தனை தீ விபத்தி ஏற்படுகிறது..

சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் எப்படி வேண்டுமானலும் சந்தோசமாக இருக்கலாம்.. ஆனால் இப்படிதான் சந்தோசமாக இருப்பேன் என்பது தவறு. பண்டிகை என்ற ஒரு நாளை வைத்து அன்று ஒரு நாள் மட்டும் சந்தோசமாக இருப்பதை விட,  நாம் நினைத்தால் வருடம் முழுவதும் சந்தோசமாக இருக்கலாம்.

வெடி சத்தம் தான் ஒருவனுக்கு சந்தோசத்தை தருகிறது என்றால்.. நாட்டில் எல்லை பகுதியில் வெடிக்கும் வெடி சத்தமும் சந்தோசத்தை தான அளிக்க வேண்டும்.  உண்மையில் சந்தோசம் என்பது அது அல்ல...!!!
 by
spark MRL.K
அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி




Tuesday, October 8, 2013

ghost (பேய்கள், ஆவிகள்)


பேய்கள், ஆவிகள் இருக்கா... இல்லையா...? சில அறிவியல் உண்மைகள்...
+++++++++++++++++++++++++++++++

இந்த உலகத்துல பேய் இருக்கா.. இல்லையானு பலருக்கு சந்தேகம் இருக்கு.. ஏன்னா மக்கள் அந்த அளவுக்கு பேய் மீது நம்பிக்கை வச்சிருக்காங்க..!!

பேய், ஆவி இந்த இரண்டுக்கும் வித்யாசம் இருக்கு.. அதாவது இயற்க்கையாக இறந்தவர்கள் ஆவியாகவும்... தனது விதி முடிவதற்க்குள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது கொலை செய்யபட்டோ அல்லது விபத்தில் இறந்தவர்கள் தங்கள் ஆயுள் முடியும் வரை பேயாக அலைகின்றனர் என்பது எல்லாரும் நம்பும் ஒன்று.

பேய்
====
அதாவது தற்கொலை செய்து கொள்ளுகிறாவர்கள் தங்கள் ஆயுள் முடியும் வரை பேயாக அலைவார்கள் என்றாள், அவர்கள் இந்த உலகத்தில் வாழ அயுள் இருந்தும், என்று அர்த்தமாகிறது. அனால் இந்த நேரத்தில், இந்த மரத்தில் இத்தனை இலைகள் உதிரவேண்டும் என்பது இறைவனுடைய ஆணையே. அது மட்டும் இல்ல ஒரு துரும்மு அசைந்தால் கூட அது இறைவன் செயலே.. என்று அணைத்து மதவாதிகளும் கூறுவது.  அதாவது எல்லாமே விதி படிதான் நடக்கிறாது என்பது பொருள்.

இக்கருத்துப்படி பார்பின் ஒருவன் தற்கொலை செய்து கொள்வதும் விதிபடிதான் நடக்கிறாது இல்லையா..?

ஒருவன் தற்கொலை செய்து கொண்டு இறக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருந்தால் தான் அவன் தற்கொலை செய்துகொள்கிறான். அப்படி இருப்பின், அன்றோடு அவன் ஆயுள் முடிய வேண்டும் என்று அவனுக்கு விதியிருக்கிறது என்று அர்தமாகிறது.

எனவே, தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு இன்னும் ஆயுள் இருப்பதாகவும், அதனால் தான் அவர்கள் ஆயுள் முடியும் வரை பேயாக அலைகிறார்கள் என்று மூட நம்பிக்கையை நம்ப முடிகிறது.

ஆவிகள்
=========
இயற்கையாக இறந்தவர்கள் ஆவியாக மாறி மேலோகத்தில் இருந்து கொண்டு நம்மை பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், முறைபடி யாகம் செய்தால் ஆவிகளுடம் பேசலாம் என்றும் நம்ம ஊர்ல பலர் புளுவிகிட்டு திரியுராங்க..

ஏங்க மறுபிறவினு ஒன்னு இருக்கு என்று   எல்லாரும் நம்புரிங்க.. அப்படி இருக்கையில் இறந்தவர்கள் அடுத்து பிறவியில் தான பிறந்திருக்க முடியும்.. அப்படி இருக்கையில் எப்படி அவர்கள் ஆவியாக மேலோகத்தில் இருக்க முடியும்.. இதிலிருந்தே தெரிய வில்லையா மறுபிறவியும் பொய், ஆவிகளும் பொய் பேய்களும்  பொய் என்று..

சில அறிவியல் விளக்கங்கள்..
================================

1. இரவு தூங்கும் போது திடிரென்று நம்மை ஏதோ ஒன்று அமுக்குவது போன்ற உண்ர்வு ஏற்படும். சமத்தில் நம்மால் புரளவும் முடியாது. கத்தவும் முடியாது. நிலைமை பரிதாபமாய் இருக்கும். சுமார் அரை நிமிட நேரம் அது நீடிக்கலாம்.
இவ்வாறு ஏற்படுவதை பேய் அமுக்குவதாகக் கருதுகின்றோம். அவ்வாறு என்னுவது தவறு மட்டுமல்ல, அறியாமையுமாகும்.

இதற்கு காரணம் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நம் உடலில் இரத்த ஓட்டம் திடிரென்று தடைப்படும். அப்போதுதான் இந்த நிலை ஏற்படுகிறது. மீண்டும் இரத்த ஓட்டம் ஓட ஆரம்பித்ததும், நாம் துடித்துப் பிடித்து எழுந்து விடுகிறோம். அவ்வளவே.!

2. இரவு நேரத்தில் மரத்தடியில் நாம் துங்கும் போது சில சமயம் மூச்சு தினறல் ஏற்பட்டு மூச்சு விடுவதற்க்கே சிறமம் ஏற்படுகிறது... இதற்க்கு காரணமும் பேய் என்று சொல்லுகின்றனர்.
உண்மையில் அது உண்மை அல்ல.. இரவு நேரத்தில் மரங்கள் ஆக்சிஜனை உள்வாங்கி கொண்டு கார்பன் டை ஆக்சைடை அதிகமாக வெளியிடுகிறது. அதை நாம் சுவாசிக்கும் போது மூச்சு தினறல் ஏற்படுகிறது.

இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அருகிள் உள்ள பெரியா டாக்டர்களிடம் இதை சொல்லி விசாரித்து பாருங்கள்.. உங்களுக்கே உண்மை புரியும்..!!!
===================================================

காலங்காலம நம்மை பேய் இருக்குனு பயமுறுத்துபவர்கள் சொல்லும் ஒன்று.. அங்க பேய் இருக்கு, இங்க இருக்கு, அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கனு தான் சொல்லுவாங்க... அப்படியே தான் பார்ததாக சொன்னாலும் அதை சரியான முரையில் நிறுபிக்க மாட்டார்கள்.

சிலருக்கு பேய் பிடிச்சிருக்குனு சொல்லுவதுண்டு. எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..? உண்மையில் பேய்க்கு சக்தி இருக்கு என்றாள், அதனால் ஒரு உடம்பில் இருந்து மற்றவர் உடம்பிற்க்கு மாறமுடியும் என்றால், நம்முன்னால் ஒரு மேஜிக் பண்ணி காட்ட சொல்லுங்க.

அதேமாதிரி இறந்தவர்களின் உடலை எரிக்கும் இடமான சுடுகாட்டில் பேய்கள் உலாவிக்கொண்டிருக்கிறது என்றும். இரவு அங்கு சென்றால் பேய் அடித்து விடும் என்றும் கருத்து உள்ளது. அப்படியானால் இறந்த உடலை (பினத்தை) எரிப்பவர்கள் விடிய விடிய அங்குதான் உள்ளனர். அவர்களை பேய் ஒன்றும் செய்யவில்லையே. அப்படியானால் அவர்கள் பேயோட ஃப்ரென்டா என்ன..?

பல மந்திர சக்திகளை பயன்படுத்தி பேய்களை ஏவி விடுபவர்கள்.. ஏன் அந்த மந்திர சக்திகளை பயன்படுத்தி பெரிய பணக்கரனாகியிருக்கலாம்ல. ஏன் அவர்கள் இன்னும் 100 க்கும் 500 க்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. சற்று சிந்தியுங்கள்..

பேய பார்ததாக கூறும் அனைவருக்குமே ஒன்று கூறிக்கொள்கிறேன். இது வெறும் உங்கள் மனதில் உள்ள குழப்பமே தவிர வேறு ஒன்றும் இல்ல. அதாவது இரவு கயிரை கண்டால் பாம்பு என்று சில சமயம் பயப்படுவோம் அல்லவா அது போலதான்.

எனவே மற்றாவர்கள் சொல்லுவதை உடனே நம்மப வேண்டாம். நம்ப வேண்டியதை நம்புங்கள். இல்லாதை தீர விசாரித்து செயல்படுங்கள். தேவையற்ற மூட நம்பிக்கைகளை ஒழிப்போம்.

அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி