ஆடு மாடுகளை கடவுளுக்கு பலியிடும் முறை எப்படி தோன்றியது...??
poo
நாம் குரங்குகளாக ஒரு காலத்தில் காட்டில் அலைந்து கொண்டிருந்தோம். முன்னங்கால்களை தூக்கிப் பிறகு நட்டமாக நடக்கத் துவங்கினோம். முன்னங்கால்கள் இரண்டும் பிறகு கைகளாகிக் கீழே தொங்கின. கைகளே இல்லாத காலத்தில் கையெடுத்து கும்பிட சாமிகளும் பூமியில் இல்லை. சாமியில்லாத பூமியில் ரொம்ப காலம் மனிதர்கள் வாழ்ந்தார்கள். பின்னர் கூட்டம் கூட்டமாக இனக்குழுக்களாக வாழத் துவங்கினார்கள்.
வேட்டையாடிச் சாப்பிட்ட காலம் அது. மனித மூளை இப்போது இருப்பது போல அவ்வளவு சுறுசுறுப்பாகவும் கூர்மையாகவும் வளர்ச்சி பெறாத காலம். கைகளை பயன்படுத்தி மனிதன் உழைக்கத் துவங்கினான், கைகளின் உழைப்பால் நரம்பு மண்டலத்தின் தலைமைச் செயலகமான மூளை என்கின்ற உறுப்பு உருவானது. இயற்கையோடு இயற்க்கையாக மனிதர்கள் வாழ்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை சுற்றி நடப்பதை கவனிக்கத் துவங்கினார்கள். மெல்ல மெல்ல மூளை வேலை செய்கிறது. சிந்தனை, உணர்வு எல்லாம் வளர்கிறது.
அப்போது காடுகளில் மலைகளில் நீர் கிடைக்கும் இடங்களை சுற்றித்தான் வாழ்க்கை. பூச்சிக்கடிகளுக்கு நடுவே அப்பாவிகளாக மனித வாழ்க்கை துளிர் விட்டது. அந்த காடு திடீரென தீப்பற்றி எரியும். விலங்குகளும் மனிதர்களும் பதறி ஓடுவார்கள். மின்னல் வெட்டியதால் தீப்பிடித்தது. மின்னல் மேலே வானத்திலிருந்து வந்தது. நாள் கணக்கில் காடுகள் எரிந்துகொண்டே இருக்கும். மனிதர்களால் காட்டுத்தீயை அணைக்க முடியுமா..? அதுவும் அந்தகாலத்தில். பின்னர் இடிச்சத்தம் கேட்கும். அதுவும் மேலேதான். மழை பெய்யும். பல நாள் விடாமல் பெய்யும் மழையில் தான் காட்டு தீ அணையும். மழையும் மேலே இருந்துதான் வந்தது. பகலில் சூரியன் சுட்டெரிக்கிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது. இரவில் நிலா ஒளி தருகிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது.
நல்லது கெட்டது எல்லாமே மேலே இருந்துதான் வருகிறது என்று அன்றைய மனிதன் நினைத்தான். ஆகவே மேலே ஏதோ சக்தி இருப்பதாக அவன் கற்பனை செய்தான். அன்றைய மனிதர்கள் அந்த சக்தியை சமாதானப்படுத்தி நல்லதை மட்டும் கீழே அனுபினால் போதும் என்று சொல்ல ஆசைப்பட்டர்கள். சமாதனப்படுத்துவது எப்படி என்பது அடுத்த பிரச்சினை. அன்றை மனிதர்கள் மிருகங்களை சாமாதனப்படுத்த தங்களிடம் இருந்த ஆடு மாடுகளை தூக்கி போடுவார்கள். அந்த மிருகம் ஆடுமாடுகளை தின்று சமாதானமாகி விடும்.
அதே பாணியில் மேலே இருக்கும் சக்தியை சமாதானப்படுத்த ஆடுகளை தூக்கி கொண்டு உயரமான மலை உச்சிகளுக்குப் போனார்கள். உலகமெங்கும் மலைகளில் சாமி கோவில்கள் இருப்பதன் ரகசியம் புரிகிறதா..? ஆனால் மலைக்குப் போனாலும் வானம் எட்டவில்லை. என்னடா செய்யிறது என்று மலையில் நின்று யேசித்தார்கள். காடுகள் எரிந்து புகை மேலே போவதைப் பார்த்தார்கள். ஆகவே ஆடு மாடுகளை தீயில் போட்டு எரித்தார்கள். அதன் புகை மேலே வானத்துக்கு போனது. சரி மேலே உள்ள சக்தி சமாதானமாகி நல்லது செய்யும் என்று இவர்கள் சமாதனப்படுவார்கள்.
அப்படியே நடந்து கொண்டிருந்தது. பின்னர் ஒருநாள் நீங்க அனுப்புற புகை மேலே உள்ள சக்திக்காக நீங்க அனுப்புறதுதான் என்பது அந்த சக்திக்கு எப்படி தெரியும்..? என்று ஒருவன் கேள்வியை போட்டான். மக்களுக்கு குழப்பமாகி விட்டது. அப்போ என்ன செய்யிறது..? என்று அவனிடமே கேட்டார்கள். அப்படி வாங்க வழிக்கு என்று சந்தோசத்துடன் அவன் ஒரு வழி சொன்னான். மேலே உள்ள சக்திக்கு புரிகிற மொழி எனக்கு தெரியும். நீங்க ஆடு மாடுகளை தீயில் போடும் போது நான் அந்த மொழியில் " சுக்லாம் பரதம். யதா.. ததா.. " என்று மந்திரம் சொல்லுவேன். அப்பதான் மேலே உள்ள சக்திக்கு புரியும். எனக்கு அதுக்கு உண்டான சன்மானத்தை கொடுத்தா போதும் என்று சொன்னான். ஜனங்கள் ஒப்புக்கொண்டார்கள். பிறகு மந்திரம் சொல்லி ஆடு மாடுகளை தீயிட்டுக் கொளுத்தும் சடங்காக அது மாறியது. அதற்கு யாகம் என்று பெயர் வந்தது. அந்த வழிபாட்டு முறைக்கு "பிராமண மதம்" என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது. ரொம்ப காலம் இது ஓடிக்கொண்டிருந்தது.
காலப்போக்கில் மனிதர்கள் விவசாயத்தை கண்டுபிடித்தார்கள். உண்மையில் பெண்கள் தான் விவசாயத்தை கண்டு பிடித்தார்கள். விவசாயத்தை கண்டுபிடிப்பதற்க்கு முன்னால் வேட்டையாடுதல் முடிந்து ஆடுமாடுகளை வளர்க்கும் மேய்ச்சல் காலம் இருந்தது.
விவசாயம் செய்ய ஆடுமாடுகள் ரொம்ப முக்கியமாகத் தேவைப்பட்டன. நிலத்தை உழுவதற்க்கும் தேவை. சாணம் போட்டு நிலத்தை பண்படுத்தவும் தேவை. ஆகவே அப்படி இருக்கிற ஆடுமாடுகளை எல்லாம் தீயில் போட்டு கொளுத்துகின்ற மதம் சரியில்லை. இப்போது சரிப்பட்டு வராது என்று விவசாயிகள் முடிவு செய்தார்கள்.
ஆடு மாடுகளை கொளுத்துகிற சாமி வேண்டாம். ஆடுமாடுகளை காப்பாத்துகின்ற சாமிதான் இப்போது தேவை என்று முடிவு செய்து புதுசாக சாமிகளை உண்டாக்கினார்கள்.
மேல் நாடுகளில் யேசு கிறிஸ்துவை நல்ல மேய்ப்பாளராக உருவாக்கினார்கள். நம் நாட்டில் புல்லாங்குழல் ஊதி மாடுகளை மேய்கிற கிருஷ்ண பகவானை உண்டாக்கினார்கள். இதனால் கிறிஸ்துவ மதமும் வைஷ்ணவ மதமும் தோன்றின.
By
Spark MRL.K
சாமிகளின் பிறப்பும் இறப்பும் புததகத்திற்கு (" துளிர்" அறிவியல் மாத இதழ்) எனது நன்றி...
poo
நாம் குரங்குகளாக ஒரு காலத்தில் காட்டில் அலைந்து கொண்டிருந்தோம். முன்னங்கால்களை தூக்கிப் பிறகு நட்டமாக நடக்கத் துவங்கினோம். முன்னங்கால்கள் இரண்டும் பிறகு கைகளாகிக் கீழே தொங்கின. கைகளே இல்லாத காலத்தில் கையெடுத்து கும்பிட சாமிகளும் பூமியில் இல்லை. சாமியில்லாத பூமியில் ரொம்ப காலம் மனிதர்கள் வாழ்ந்தார்கள். பின்னர் கூட்டம் கூட்டமாக இனக்குழுக்களாக வாழத் துவங்கினார்கள்.
வேட்டையாடிச் சாப்பிட்ட காலம் அது. மனித மூளை இப்போது இருப்பது போல அவ்வளவு சுறுசுறுப்பாகவும் கூர்மையாகவும் வளர்ச்சி பெறாத காலம். கைகளை பயன்படுத்தி மனிதன் உழைக்கத் துவங்கினான், கைகளின் உழைப்பால் நரம்பு மண்டலத்தின் தலைமைச் செயலகமான மூளை என்கின்ற உறுப்பு உருவானது. இயற்கையோடு இயற்க்கையாக மனிதர்கள் வாழ்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை சுற்றி நடப்பதை கவனிக்கத் துவங்கினார்கள். மெல்ல மெல்ல மூளை வேலை செய்கிறது. சிந்தனை, உணர்வு எல்லாம் வளர்கிறது.
அப்போது காடுகளில் மலைகளில் நீர் கிடைக்கும் இடங்களை சுற்றித்தான் வாழ்க்கை. பூச்சிக்கடிகளுக்கு நடுவே அப்பாவிகளாக மனித வாழ்க்கை துளிர் விட்டது. அந்த காடு திடீரென தீப்பற்றி எரியும். விலங்குகளும் மனிதர்களும் பதறி ஓடுவார்கள். மின்னல் வெட்டியதால் தீப்பிடித்தது. மின்னல் மேலே வானத்திலிருந்து வந்தது. நாள் கணக்கில் காடுகள் எரிந்துகொண்டே இருக்கும். மனிதர்களால் காட்டுத்தீயை அணைக்க முடியுமா..? அதுவும் அந்தகாலத்தில். பின்னர் இடிச்சத்தம் கேட்கும். அதுவும் மேலேதான். மழை பெய்யும். பல நாள் விடாமல் பெய்யும் மழையில் தான் காட்டு தீ அணையும். மழையும் மேலே இருந்துதான் வந்தது. பகலில் சூரியன் சுட்டெரிக்கிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது. இரவில் நிலா ஒளி தருகிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது.
நல்லது கெட்டது எல்லாமே மேலே இருந்துதான் வருகிறது என்று அன்றைய மனிதன் நினைத்தான். ஆகவே மேலே ஏதோ சக்தி இருப்பதாக அவன் கற்பனை செய்தான். அன்றைய மனிதர்கள் அந்த சக்தியை சமாதானப்படுத்தி நல்லதை மட்டும் கீழே அனுபினால் போதும் என்று சொல்ல ஆசைப்பட்டர்கள். சமாதனப்படுத்துவது எப்படி என்பது அடுத்த பிரச்சினை. அன்றை மனிதர்கள் மிருகங்களை சாமாதனப்படுத்த தங்களிடம் இருந்த ஆடு மாடுகளை தூக்கி போடுவார்கள். அந்த மிருகம் ஆடுமாடுகளை தின்று சமாதானமாகி விடும்.
அதே பாணியில் மேலே இருக்கும் சக்தியை சமாதானப்படுத்த ஆடுகளை தூக்கி கொண்டு உயரமான மலை உச்சிகளுக்குப் போனார்கள். உலகமெங்கும் மலைகளில் சாமி கோவில்கள் இருப்பதன் ரகசியம் புரிகிறதா..? ஆனால் மலைக்குப் போனாலும் வானம் எட்டவில்லை. என்னடா செய்யிறது என்று மலையில் நின்று யேசித்தார்கள். காடுகள் எரிந்து புகை மேலே போவதைப் பார்த்தார்கள். ஆகவே ஆடு மாடுகளை தீயில் போட்டு எரித்தார்கள். அதன் புகை மேலே வானத்துக்கு போனது. சரி மேலே உள்ள சக்தி சமாதானமாகி நல்லது செய்யும் என்று இவர்கள் சமாதனப்படுவார்கள்.
அப்படியே நடந்து கொண்டிருந்தது. பின்னர் ஒருநாள் நீங்க அனுப்புற புகை மேலே உள்ள சக்திக்காக நீங்க அனுப்புறதுதான் என்பது அந்த சக்திக்கு எப்படி தெரியும்..? என்று ஒருவன் கேள்வியை போட்டான். மக்களுக்கு குழப்பமாகி விட்டது. அப்போ என்ன செய்யிறது..? என்று அவனிடமே கேட்டார்கள். அப்படி வாங்க வழிக்கு என்று சந்தோசத்துடன் அவன் ஒரு வழி சொன்னான். மேலே உள்ள சக்திக்கு புரிகிற மொழி எனக்கு தெரியும். நீங்க ஆடு மாடுகளை தீயில் போடும் போது நான் அந்த மொழியில் " சுக்லாம் பரதம். யதா.. ததா.. " என்று மந்திரம் சொல்லுவேன். அப்பதான் மேலே உள்ள சக்திக்கு புரியும். எனக்கு அதுக்கு உண்டான சன்மானத்தை கொடுத்தா போதும் என்று சொன்னான். ஜனங்கள் ஒப்புக்கொண்டார்கள். பிறகு மந்திரம் சொல்லி ஆடு மாடுகளை தீயிட்டுக் கொளுத்தும் சடங்காக அது மாறியது. அதற்கு யாகம் என்று பெயர் வந்தது. அந்த வழிபாட்டு முறைக்கு "பிராமண மதம்" என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது. ரொம்ப காலம் இது ஓடிக்கொண்டிருந்தது.
காலப்போக்கில் மனிதர்கள் விவசாயத்தை கண்டுபிடித்தார்கள். உண்மையில் பெண்கள் தான் விவசாயத்தை கண்டு பிடித்தார்கள். விவசாயத்தை கண்டுபிடிப்பதற்க்கு முன்னால் வேட்டையாடுதல் முடிந்து ஆடுமாடுகளை வளர்க்கும் மேய்ச்சல் காலம் இருந்தது.
விவசாயம் செய்ய ஆடுமாடுகள் ரொம்ப முக்கியமாகத் தேவைப்பட்டன. நிலத்தை உழுவதற்க்கும் தேவை. சாணம் போட்டு நிலத்தை பண்படுத்தவும் தேவை. ஆகவே அப்படி இருக்கிற ஆடுமாடுகளை எல்லாம் தீயில் போட்டு கொளுத்துகின்ற மதம் சரியில்லை. இப்போது சரிப்பட்டு வராது என்று விவசாயிகள் முடிவு செய்தார்கள்.
ஆடு மாடுகளை கொளுத்துகிற சாமி வேண்டாம். ஆடுமாடுகளை காப்பாத்துகின்ற சாமிதான் இப்போது தேவை என்று முடிவு செய்து புதுசாக சாமிகளை உண்டாக்கினார்கள்.
மேல் நாடுகளில் யேசு கிறிஸ்துவை நல்ல மேய்ப்பாளராக உருவாக்கினார்கள். நம் நாட்டில் புல்லாங்குழல் ஊதி மாடுகளை மேய்கிற கிருஷ்ண பகவானை உண்டாக்கினார்கள். இதனால் கிறிஸ்துவ மதமும் வைஷ்ணவ மதமும் தோன்றின.
By
Spark MRL.K
சாமிகளின் பிறப்பும் இறப்பும் புததகத்திற்கு (" துளிர்" அறிவியல் மாத இதழ்) எனது நன்றி...
No comments:
Post a Comment