Monday, June 30, 2014

Strive (போராடு)


real estate

இந்தியா ஒரு விவசாய நாடு...
என்பது அணைவருக்கும் தெரிந்த ஒன்று....
ஆனால் உண்மையில் இன்று....
இந்தியா ஒரு ரியல் எஸ்டேட் நாடு....
-------------
காடுகளை அழித்து
வீடுகளை கட்டுவோம்
-------------------
என்ற மோசமான திட்டத்தை..
கையில் எடுத்திருக்கும் நாம்...
உண்மையில் அங்கு வீடுகள் கட்டுகிறோமோ இல்லையோ.... இடத்தை வாங்கி போட்டு விற்றுக்கொண்டிருக்கிறோம்...
-------------
இது நீடித்தால்....
இந்த புகைப்படத்தில் இருக்கும் சாதாரண காட்சி கூட
வருங்காலத்தில் ஒரு அரிய காட்சியாக மாறிவிடும்
by
spark MRL.K ( க.முரளி)

who is the dead body (இதில் யார் பிணம் )

இன்றும் பல இடங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.... இறந்த மனித உடலை நடு வீட்டுல வச்சிகிட்டு இரச்சினை பண்ணுவாங்க...
============
ஒரு வேளை இறந்த உடலுக்கு, 
நடக்கும் சக்தி இருந்தால்...!!!!
தானே ஒடி போய், 
சுடுகாட்டில் படுத்துக்கொள்ளும்....!!!

by
spark MRL.K (க.முரளி)
;

Monday, June 23, 2014

who is fool

டேய் உருப்புடாதவனே... 
நீயலாம் என்னைக்கு திருந்த போற... 
உன் தம்பிய பாரு...
அண்ணன் பாரு...
அவன பாரு... 
இவன பாரு...
உன் கூட பிறந்தவங்க தான...
உன் பிரண்டு தானே.... அவன் மட்டும் எப்படி இருக்குறான்.. நல்ல சம்பாதிக்கிறான்.. நீ என்னைக்கு உருப்புட போறேன்னு....
========
மனிதனாய் அனைவரும் தன வாழ்க்கையில் ஒரு தடவையாவது கேட்கும் வார்த்தை இது....
========
ஆனால் உண்மையில் உருப்புடாதவன் யார்...?
========
பொதுவா மக்கள்கிட்ட கேட்ட சொல்லுவாங்க....
========
“நல்ல படிச்சிட்டு வேலைக்கு போகதவன்,

அவங்க அப்பா இவன் டாக்டர வரணும்னு ஆசைப்பட்டார்.. ஆனா இவன் இப்படி இருக்கான்... இந்த தொழில்ல வருமானமே வராதே... இவன் எப்படி உருப்புட போறான்..

இப்படி ஏதாவது தன்னோட லட்சியத்துக்காக பிடித்த வேலையை செய்யுறவங்க எல்லாமே... உருப்புடாதவங்கனு சொல்லுவாங்க “

இன்னும் சில பேர்... தனக்கு தானே சொல்லுவதுண்டு -
எங்க குடும்பத்துலே நான் மட்டும்தான் உருப்புடாதன்...
========
உண்மையில் யார்....???????????????
========
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும்...
அல்லது
காசே இல்லாத ஓட்டாண்டிய இருந்தாலும்....
தனக்குன்னு ஒரு லட்சியம் இல்லாதவனே உருப்புடாதவன்....

++++++++
“லட்சங்கள் பல இருந்தாலும்
லட்சியம் இல்லாதவனே உருப்புடாதவன்”
+++++++++
by
spark MRL.K
;

education

இந்தியாவில் இன்றைய கல்விமுறை முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி முறைபடி வந்தது என்பதால் இங்கிலாந்தில் அறிமுகமான பெக்கானின் கல்வியே இன்னமும் இங்கு எச்சசொச்சமாய் தொடர்கிறது.

பெக்கான் தான் கல்வி இயல்களாகக் கூறு போட்டவர். அவரது கல்வி துறைகள், பாடப்பிரிவுகள் என குறுகியது. இன்று ஒரு தாவரவியல் ஆசிரியருக்கு வேதியியல் குறித்து எந்த கவலையும் இல்லை. வரலாறு ஆசிரியர்க்கு கணக்கு பாடம் பற்றி பிரக்ஞை இல்லை. ஒவ்வொன்றும் தனித்தனியே மூடிவைக்கப்பட்ட வடிவங்ள். இந்த நிலைக்கு பிரான்சிஸ் பெக்கானின் அறிவியல் மையக் கல்வியே காரணம்.

ஆனால் சார்லஸ் உட் வேறு சில திட்டங்களையும் முன்வைத்து அவர் எழுதுகிறார். “ நமக்கு தேவை சிந்திக்கக் கற்கும் தத்துவார்த்த மேதைகள் அல்ல.. நமது அறிவை தாண்டாமல் அடி பணிந்து உழைக்கும் சேவகர்களே நமக்கு தேவை. எனவே இந்திய கல்வி என்பது தகவல் தரும் கல்வியாக மட்டும் போதும். வேலைக் காலத்தில் தகவல் பறிமாற ஆங்கில மொழித் தேர்ச்சியும், கணக்கெழுத ஒரு கணிதமும் கருவிகளை இயக்கிட அறிவியலும் மட்டுமே தேவை. அதற்கு அழமான கல்வி உதவாது.”

1882 ல் வில்லியம் ஹன்ட்டர் என்பவரால் இந்திய கல்வி வரலாற்றில் ” இந்தியக் கல்விக்குழு (Indian Education Commission) ” என்று அழைக்கப்பட்ட முதல் கமிஷன் இங்கிலாந்து சரசால் நியமிக்கப்பட்டது. இது தொடக்கக்கல்வி குறித்து மட்டுமே ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஹன்ட்டர் லண்டனில் அளித்த பேட்டியில் “ இங்கிலாந்து பிரஜைகளுக்கும், நமது பிரித்தானிய பேரரசுக்கும் அவசியமான ராஜீய உற்பத்தி துறை சார்ந்த பலன்களை உடனடியாகப் பெற்றுத்தரும் பிரித்தானிய வேலைப் பளுவை (British Labour) குறைக்கும் ஒரு கல்வியை முன்வைப்பதே நோக்கம்” என குறிப்பிட்டார். அவரது கமிஷன் காலாண்டு தேர்வுகளை மைக்கெல்சன் விடுப்புத் தேர்வு என்றும், அரையாண்டு தேர்வை கிறிஸ்மஸ் விடுப்பு தேர்வு எனவும், முழு ஆண்டு தேர்வை கோடை விடுப்பு தேர்வு என அழைத்தது. ஆனால் விவசாய நாட்டில் பள்ளிக்கு விதிப்பிற்கு ஒரு விடுமுறை, அறுவடைக்கு ஒரு விடுமுறை, மூன்று போகத்திற்கு ஒரு விடுமுறை அல்லவா விட்டிருக்க வேண்டும்...

நமது கல்வி வெறும் மனப்பாடம் செய்வதையும், அவ்வாறு செய்வதை தேர்வில் அப்படியே கொட்டி தீர்க்கவும் திரும்ப திரும்ப நிகழும் செயல்பாடு, வாழ்வின் அன்றாட செயல்பாடுகளில் பாடப்பொருளைக் கற்றல் அடிப்படையில் செயல்படுத்த விடாமல் தற்கால நினைவாற்றல் (Instant – Memory) தகுந்த கால நீட்டிப்பு இன்றி தேர்வு முடிந்த கையோடு மறக்க வைக்கிறது.

சி.வி.ராமனுக்கு பிறகு ஒரு நோபல் விஞ்சானியை நமது கல்வியால் உருவாக்க முடியவில்லை. உலக அளவில் பெருத்த லஞ்ச ஊழல் சாப்ரஜ்யமாகப் புழுத்துப் போன நமது கல்வி வருடம் ஒன்றிற்கு பல்லாயிரம் பி.எச்.டி களைப் போலியாக உருவாக்குவதை காணலாம்.

இந்த கல்வி பிள்கேட்ஸ்களை உருவாக்கத் தவறிவிட்டது. பில்கேட்ஸின் வேலையாட்களைத் தான் உருவாக்கி கொண்டிருக்கிறது....
;
(படித்ததில் பிடித்தது

English medium ஆங்கில வழி கல்வி

உலகமெங்கும் பள்ளிக்கூடம் (School) என்னும் அமைப்பு உருவாக்கி 200 வருடங்களே ஆகின்றன. பள்ளி என்ற சொல் நமக்கு சமணர் வழியே வந்தது என்பதே உண்மையாகும். அதனால் தான் இன்றும் தமிழகத்தில் பள்ளி, பட்டி என முடியும் ஊர்கள் எல்லாம் சமணர்கள் வாழ்ந்த பகுதியாக நாம் அடையாளம் காணலாம்.

நமது வகுப்பறையின் பிறப்பு எகிப்தில் நிகழ்ந்ததாகப் பெரும்பாலான வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். அது பிளாட்டோ, அரிஸ்டாட்டிலுக்கு முற்பட்டது. கி.மு. 2000. எனவே எகிப்தின் பிரமிடுகளை போல அது பழமையானது.

இன்றைய நமது கல்வி முறை பற்றி பார்ப்போம்...
===========================================

இன்னு மக்களிடையே ஆங்கில வழிக்கல்வி அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது... அதன் பின்னணி எத்தனை பேருக்கு தெரியும்.

ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் ரயில் போக்குவரத்து, சாலை, கப்பல் போக்குவரத்துகளின் அறிமுகப்படுத்தினர். இது நமது மக்களுக்காக சேவை செய்ய தொடங்கியவை அல்ல... அவை நமது நாட்டில் உள்ள காடுகளில், நிலங்களில் உள்ள செல்வத்தை மொத்தமாக எடுத்து செல்வதற்காக போடப்பட்டவை.

அதில் வேலை செய்ய உள்ளூர் மொழி தெரிந்த அதே சமயம் ஆங்கிலேய அதிகாரியிடம் சரளமாக கருத்து பரிமாற்ற ஆங்கிலம் தெரிந்த ஆட்கள் வேலைக்கு தேவைப்பட்டனர்.
இந்த பணியிடமே நிறைய தேவைபட்டியல்களில் இடம் பிடித்தது. இதற்கு “எழுத்தர்” என்றே பெயர். அதோடு ஒரு “கணக்கர்” தேவையாக 1870ல் பிரித்தானிய அரசுக்கு லட்சக்கணக்கில் ஆட்கள் தேவைப்பட்டனர். எனவே அவர்கள் ஆங்கில வழி கல்வியை முன் வைத்தனர்.

தங்களது தாய்மொழி கல்வி தேவை என்ற போதிலும்... ஆங்கில கல்வி மூலம் வெளியே பணியிடம் சென்ற இந்தியர்களின் வாழ்நிலை அரசு ஊழியர் அந்தஸ்து உயர்த்தி இருந்தது என்பது ஆங்கில வழிக் கல்வியை இங்கு மேலும் வேரூன்றிட வைத்து..

இதுவே ஆங்கில வழி கல்வி இங்கு பரவிட பெரிய காரணம்... மேலும் அவர்கள் நமது கல்வி முறையில் கொண்டுவந்த சூழ்ச்சியை பற்றி பின்வரும் நாட்களில் பார்ப்போம்...
......
(படித்ததில் பிடித்தது)

wilma rudolph

வில்மா ருடால்ப் கதை
-----------------------------------

வில்மா ருடால்ஃப் டென்னிஸியில் June 23,1940-ல் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். நான்கு வயதில் அவருக்கு ஸ்கார்லட் ஜுரத்தோடு இரட்டை நிமோனியா (ஜன்னி) வந்தது. இது ஒரு அவரை இளம்பிள்ளை வாதத்தில் முடக்கி விட்டது. அதனால் அவர் காலுறை பட்டைகளை அணிய வேண்டியதாயிற்று. டாக்டர் வில்மாவிடம் ஒரு போதும் தரையில் பாதங்களை வைக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் அவரது தாயார் அவரை ஊக்கப்படுத்தினார்.

அவரது தாயர் வில்மாவிடம் ”திறமையும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் இருந்தால் நீ எதை விரும்புகிறாயோ... அதை உன்னால் அடையமுடியும் என்றார்.” அதற்க்கு வில்மா, “ இந்த உலகிலேயே தடகளத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய பெண்ணாக விரும்புகிறேன்” என்று சொன்னார்.

தனது ஒன்பதாவது வயதில் டாக்டர் ஆலோசனைக்கு எதிராக அவர் தனது கால்பட்டையை விலக்கி விட்டார். டாக்டர்கள் அவரால் ஒரு போதும் தரையின் மேல் கால்களை பதிக்க இயலாது என்று சொன்னதற்கு மாறாகத் தனது முதல் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் கடைசியாகவே வந்தார். பிறகு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டார். ஆனாலும் கடைசியிலேயே வந்து கொண்டிருந்தார். அவர் முதலாவதாக வரும் நாள் வரும் வரை.

தனது 15வது வயதில் அவர் டென்னிஸி ஸ்டேட் பல்கலைக்கழகதிற்கு சென்றார். அங்கே எட் டெம்பிள் என்ற ஒரு பயிற்ச்சியாளரை சந்தித்தார். அவரிடம் வில்மா, “ இந்த உலகிலேயே தடகளத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய பெண்ணாக விரும்புகிறேன்” என்று தன் விருப்பத்தை சொன்னார். அதற்கு அவர் “உனக்கு இத்தகைய தன்னம்பிக்கை உணர்வு இருப்பதால் உன்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் நான் உனக்கு உதவி செய்கிறேன்” என்று பதிலளித்தார்.

ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொள்ளும் நாள் வந்தது. ஜுட்டா ஹெய்ன் என்ற யாராலும் தோற்க்கடிக்கபடாத பெண்ணிற்க்கு எதிராக வில்மா நிறுத்தப்பட்டார். முதல் நிகழ்ச்சி 100 மீட்டர் ஓட்டப் பந்தயமாகும். அதில் வில்மா, ஜுட்டா ஹெய்னைத் தோற்கடித்து தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். இரண்டாவது நிகழ்ச்சி 200 மீட்டர் ஓட்டப்பந்தயமாகும். அதிலும் வில்மா, ஜுட்டாவை வென்று தனது 2வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

மூன்றாவது 400 மீட்டர் தொடர் (ரிலே) ஓட்டமாகும். இந்த முறையும் ஜுட்டாவிற்கு எதிராக நிறுத்தப்பட்டர். ரிலேயில் மிக வேகமாக ஓடும் நபரே எப்போதும் கடைசி சுற்றில் ஓடுவார். இவர்கள் இருவரும் தங்கள் அணியை தாங்கும் நிலையில் இருந்தார்கள். முதல் 3 பேர் ஓடினார்கள். அவர்கள் வெகு சுலபமாகக் கோலை மற்றிக் கொண்டார்கள். வில்மாவின் முறை வந்ததும் அவர் கோலை தவற விட்டார். ஆனால் வில்மா அடுத்த முனையிலிருந்து ஜுட்ட வெகுவேகமாக பாய்ந்து செல்வதை பார்த்தார். கோலை எடுத்தார். ஓர் இயந்த்ரம் போல் ஓடினார். ஜுட்டாவை மூன்றாவது முறையாக வென்று மூன்றாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அது ஒரு வரலாறு ஆயிற்று. அந்த முடமான பெண் 1960 ஒலிம்பிக்கில் உலகிலேயே மிக வேகமாக ஓடும் பெண்ணாக ஆனார்.
.
.
(படித்ததில் பிடித்தது)
.

this is also way of win

1. ரூபன் கன்ஸால்ஸ் ஒரு டென்னிஸ் வீரர். அவர் டென்னிஸ் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தார். அது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அவர் உலகப் பட்டத்திற்காக விளையாடிக் கொண்டிருந்தார். இறுதி ஆட்டத்தில், போட்டிக்கான பாயிண்டை பெறுவதற்காக ஒரு மிகப் ஷாட்.அடித்தார். நடுவரும், லைன்ஸ்மேனும் அந்த அடி மிகச் சரியானது என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவரை வெற்றியாளர் என்று அறிவித்தனர். ஆனால் கன்ஸாலஸ் சிறிது நேரம் கழித்து தயக்கத்துடன் பின்னால் திரும்பி, தன் எதிர் அணி வீரரின் கையைப் பற்றிக் குலுக்கியவாறு. ” அந்த அடி தவறானது” என்று சொன்னார். அதன் பலனாக அவர் ஆட்டத்தை இழந்தார். ஆகவே போட்டியில் தோல்வியுற்றார். இதை பார்த்த சுற்றியுள்ள எல்லோரும் வாயடைத்து நின்றனர். வெற்றி முகப்பில் உள்ள ஒருவர், அதிலும் அவருக்கு சாதயகமாகவே விளையாட்டின் அதிகாரிகள் இருந்தும், தன்னை தகுதி இழக்கச் கொண்டு தோற்பதை யார்தான் கற்பனை செய்து பார்க்க முடியும்..! அவரிடம், அவர் ஏன் அப்படி செய்தார் என்று கேட்டவுடன்.. அவர் அதற்கு “ எனது நாணயத்தை காப்பாற்றிக்கொள்ள அது ஒன்றுதான் ஓரே வழி.” என்று பதிலளித்தார்... அவர் போட்டியில் தோல்வியடைந்தார்... ஆனாலும் அவர் வெற்றியாளர்தான்....

2. ஒலிம்பிக் என்பது ஒரு வாழ்நாள் நிகழ்வாகும். லாரன்ஸ் லெமியக்ஸ் என்ற வீரர், போட்டியின் போது சிக்கலில் மாட்டிக் கொண்ட தனது சகப் போட்டியாளருக்கும் உதவுவதற்காகப் படகு போட்டியில் படகோட்டுவதை நிருத்திவிட்டார். உலகம் முழுவதும் இதனைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வெற்றிபெறும் விருப்பத்தைவிடப் பிறர் உயிரின் பாதுகாப்பிற்கான தனது முன்னுரிமை பெரியதானது. அவர் போட்டியில் வெற்றி பெறவில்லை, ஆனாலும் அவர் ஒரு மாபெரும் வெற்றியாளார் ஆனார். உலகம் முழுவதுமுள்ள அரசர்களும், அரசிகளும் அவரை கெளரவித்தார்கள். ஏனென்றால் அவர் ஒலிம்பிக்கின் உணர்வைக் காப்பாற்றிவிட்டர். 

----------
வெற்றிகளைவிடச் சில தோல்விகள்...
மிகச் சிறந்த வெற்றிகளாக இருக்கின்றன...
- மைக்கேல் டி மான்டைன்
---------
.
.
(படித்ததில் பிடித்தது)

think different

பொதுவா கிராமத்து பகுதியில பால் இல்லாம வெறும் தண்ணீர், சர்க்கரை, தேயிலை போட்டு, அதை கொதிக்க வச்சி குடிப்பாங்க.... நம்மல்ல தேனீர் கடைக்கு போனா... இப்பவும் பிளாக்டீனு கேட்டு வாங்கி குடிகின்ற பலக்கம் நிறை பேருக்கு இருக்கு.... 

ஆனா அதே டீல கொங்சம் ஐஸ் போட்டு.... அத ஒரு பெரிய கண்ணாடி டம்ளர்ல ஊத்தி, அதுக்கு மேல ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து... விக்குறாங்க... இது பொதுவா எல்ல கடையிலயும் கிடைக்காது... அதுக்குனு சில கடைகள் இருக்கு அங்க கிடைக்கும்.. என்ன 6 ருமாய் டீல... ஒரு ஐஸ் கட்டிய போட்டு... அதை அழக கொண்டுவந்து கொடுத்து... விலை 100 அல்லது 150 ரூபாய்னு சொல்லுவாங்க.... ஆனா அதனோ வரலாறு சற்று வித்தியாசமானது....

ரிச்சர்ட் ப்ளெச்னிட்ன் 1904 ல், செயின்ட் லூயிஸ் உலகக் கண்காட்சியில் இந்திய டீ யின் விற்பனையை மேம்படுத்த எண்ணினார். அங்கு அவரது டீ மிகவும் சூடாக இருந்ததால் யாருமே ஒரு மாதிரிக்குகூட (சாம்பில்க்குகூட) வாங்கி குடித்து பார்க்க விரும்பவில்லை. ப்ளெச்னிடென்க்கு ஒன்றுமே புரியவில்லை...

சுற்றி பார்த்தார்.. அருகில் இருந்த மற்ற எல்ல குளிர்பானங்களும் நன்றாக விற்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தார். அப்பொழுது அவருக்கு தன்னுடைய டீயையும் நன்றாக குளிர்வித்து, அதில் சர்க்கரையும் நன்றாக கலந்து விற்றால் என்ன என்ற யோசனை திடீரென்று தோன்றியது.

அப்படியே அவர் அதை செய்தார்.. மக்களும் அதை விரும்பினார்கள். அதுவே உலகிற்கு முதன்முதலில் குளிர்ந்த டீயை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியாகும்....

எதையும் சற்று மாற்றி யேசித்தால்... அதில் கிடைக்கும் வெற்றியும் சற்று வித்தியாசமாக இருக்கும்...
.
.
(படித்ததில் பிடித்தது)
.

how to win

ஒரு நாள் காது சற்று கேளாத நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது ஆசிரியர் எழுதி கொடுத்த குறிப்புடன் வீடு திரும்பினான். அவனது தாய்க்காக எழுதப்பட்ட அந்த குறிப்பில் “உங்களது டாம் படிப்பதற்க்கு லாயக்கற்றவன், அவனை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதியிருந்தது. அதை பார்த்தய அவனது தாய் “என் டாம் ஒன்றும் முட்டாளில்லை. அவனுக்கு நானே கற்பிக்கிறேன்.” என்று பதிலளித்தார். அந்த டாம் தான் பின்னாளில் உலக புகழ் பெற்ற தாமஸ் எடிசன் ஆனான். தாமஸ் எடிசன் வெறும் மூன்று மாத பள்ளி படிப்பை பெற்றவர் தான். மேலும் அவர் பாதி காது கேக்காதவர்.

1914ல் தனது 67 வது வயதில், தாமஸ் எடிசன் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள தனது தொழிற்சாலையை தீயில் இழந்தார். அதற்கு அவர் சிறிதளவே காப்பீடு செய்திருந்தார். வயதான மனிதரான எடிசன் தனது வாழ்நாள் முயற்ச்சியெல்லாம் தீயில் பொசுங்கிப் போவதை பார்த்துக்கொண்டே,” அழிவில் பெரு நன்மை இருக்கிறது. நமது எல்லாத் தவறுகளும்பொசுங்கி போய் விட்டன. இனி நான் புதிதாக எதையும் தொடங்கலாம், நன்றி ஆண்டவனே!” என்று சொன்னார். பேரிழப்பு ஏற்பட்டாலும் கூட மூன்று வாரங்களுக்கு பிறகு அவர் ஒலிப்பதிவு கருவியை கண்டுபிடித்தார்...

தாமஸ் எடிசன் லைட் பல்பை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட 10,000 தடவைகள் தோல்வியடைந்தார்...

ஒரு மனிதனின் வெற்றிக்கு...
அவன் உடல் ஊனமோ...
அவன் முயற்சியில் ஏற்படும் தோல்வியோ...
அவன் தொழிலில் ஏற்படும் நஷ்டமோ...
ஒரு பெரிய தடையே இல்லை...

தடைகள் பல இந்தால் தான் நாம் செய்யும் செயலின் வெற்றிக்கு பின்னால் ஒரு சிறந்த அனுபவம் இருக்கும்...

“ ஓர் ஆரவாரமற்ற சீரான கடல் ஒரு போதும் திறமை வாய்ந்த மாலுமியை உருவாக்கியதில்லை”
-என்று ஓர் ஆங்கில பழமொழி சொல்லுகிறது..
-------------------
எது அவசியமோ அதை செய்யத்தொடங்குங்கள்;
பிறகு...
எதை முடியுமோ அதைச் செய்யுங்கள்;
திடீரென்று ஒரு நாள்...
முடியாததையும் நீங்கள் செய்துகொண்டிருப்பீகள்.

-செயிண்ட் பிரான்ஸிஸ் அஃப் அஸீஸி
-------------------------
.
(படித்ததில் பிடித்தது)

today education System

ஒரு காட்டில் சில மிருகங்கள் ஒரு பள்ளிகூடத்தை தொடங்க முடிவு செய்தன. அதில் ஒரு பறவையும், ஒரு அணிலும், ஒரு மீனும், ஒரு நாயும், ஒரு முயலும், மூளைவளர்ச்சி குன்றிய ஒரு விலாங்கு மீனும் மாணவர்களாக சேர்ந்தனர். 

ஒரு குழுக்கூட்டம் கூடி அந்தப் பள்ளியில் ஒரு பரந்த அடிப்படைக் கொண்ட கல்வியை தரும் நோக்கத்தில், பாடத்திட்டத்தில் பறத்தலையும், மரமேறுதலையும், நீந்துதலையும், நிலத்தில் வளை தோண்டுதலையும் சேர்ப்பதென முடிவெடுக்கப்பட்டது. இதன்படி எல்லா மிருகமும் எல்லாப் பாடத்ததையும் படிக்க வேண்டும்.

பறவையோ பறப்பதில் மிகச்சிறப்பாக தனது திறமையை காட்டி உயர்ந்த மதிப்பெண் பெற்றது. ஆனால் வளை தோண்டுவதைப் பொறுத்தவரை அது தனது அலகையும், சிறகளையும் உடைத்துக் கொண்டு பின்வாங்க ஆரம்பித்தது. அதனால் அது மிக விரைவிலேயே பறப்பதிலும் மோசமான மட்திப்பெண் பெற ஆரப்பித்தது. மரமேறுவதிலும், நீந்துவதிலும் அது பெற்றதெல்லாம வெறும் பூஜியம் தான்.

அணிலோ மரமேறுவதில் சூரப்புலியானதால் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வந்தது. இருந்தாலும் நீந்துவதில் தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது. மீன் நீந்துவதில் மிகச் சிறப்பாக செய்தாலும் நீரை வெளியே வர இயலாதுபோகவே மற்றபாடத்தில் எல்லாம் பூஜியத்தை பெற்றது.

நாய் மட்டும் பள்ளிக்கூடத்தில் சேரவில்லை. அது கட்டணம் கட்டுவதையும் நிறுத்திக்கொண்டது. அது பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக குரைத்தலையும் சேர்க்கவேண்டும் என்று நிர்வாகத்திடம் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தது. முயலுக்கு வளைதோண்டுதலில் நல்ல மதிப்பெண் கிடைத்டாலும், அதுக்கு மரமேறுவது என்னவோ உண்மையில் ஒரு பிரச்சினையாகவே இருந்தது. ஒவ்வொரு முறை மரமேற முயலும் போதும் தலைகுப்பற கீழே விழுந்து மூளை பாதிப்படைந்தது. விரைவிலேயே வளை தோண்டுவதை கூட சரியாக செய்ய இயலாதவாறு போனதால், அதில் கூட பூஜியத்தையே மதிப்பெண்ணாகப் பெற்றது.

மூளை வளர்ச்சி குன்றிய விலாங்கு மீன் மட்டும் எல்லா பாடத்தையும் அரைகுறையாக செய்து சாராசரி மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றது. இதுவா பரந்த அடிப்படை கொண்ட கல்வி..? இல்லவே இல்லை...

இவ்வுலகில் பிறந்த அணைவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது.. அதில் நாம் முயற்ச்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்... அத விட்டுட்டு இந்த பாடத்தை படிதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், இதுலதான் நல்ல ஸ்கோப் இருக்குனு எல்லாரும் சொல்லுராங்கனு படிச்சா... அது உங்க அறியாமையே தவிர.. அறிவு சார்ந்த விசயம் கிடையாது...

நாம் அறிவிற்கும், ஞானத்திற்க்கும் போட்டியிட வேண்டுமே தவிர மதிப்பெண்களுக்கு அல்ல. மக்கள் மனப்பாடம் செய்யும் திறமையோடு கல்வியை ஒப்பிட்டு குழப்பி கொள்கிறார்கள். எனவே நமக்குள் என்ன திறமை இருக்குனு அறிந்து அதில் முன்னேற வேண்டும்....
-----------------------------
[அறிபாமை வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான்...
ஆனால்..
அறிந்து கொள்ள விருப்பமில்லாமை
அதைவிடப் பெரிய வெட்கக்கேடாகும்

-பெனமின் பிரான்க்லின்]
------------------------------
.
(படித்ததில் பிடித்தது)

Wednesday, February 12, 2014

Is this love or tradition (இது காதலா அல்லது கலாச்சாரமா... )

காதலிப்பது தவறில்லை..
அணைவரும் காதலிக்கவேண்டும்...
காதலியை முத்தமிடுவதும் தவறில்லை....
அது அருகில் இருப்பவரை பாதிக்காத வகையில் இருந்தால் தவறில்லை...
நாலு செவுத்துக்குள் செய்யும் விசயத்தை நாற்பது பேருக்கு மத்தியி செய்வது தான் தவறு...

Father of Genetics

மரபியலின் விஞ்ஞானத்தின் தந்தையாக கருதப்படும் கிரிகர் மெண்டல் – ஒரு கிருஸ்துவ பாதிரியார். அவர் தனது சமயயப் பணிகளோடு சேர்ந்து இயற்க்கையை பற்றிய ஆய்விலும் ஈடுபட்டார்... இதற்காக பட்டாணி செடிகளுக்குள் கலப்பு செய்து வீரிய ரக விதையை உருவாக்கிட முயன்றார். இந்தப் பணியில் தினமும் நான்கு மணி நேரம் என, ஒரு பட்டாணி செடியின் பத்து தலைமுறைகள் எப்படி உருமாறுகின்றன என்று பல நாட்கள் பட்டாணி செடியை கவனித்தவபடியே தன் வருடங்களை கழித்தார். முடிவில் தனது ஆய்வு முடிவை தனது தலைமை பாதிரியாருக்கு எழுதியனுப்பினார்.

அவரது ஆய்வு கவனிக்கபடாமல் போனதோடு, பட்டாணி செடிகளின் விதைகளை சேதனை செய்து வீரியமாக்குவது கடவுளுக்கு எதிரான செயல் என்றும், இதுபோன்ற தீவினைகளில் ஈடுபடுவதை அவர் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதனால் அவன் மனம் உடைந்து போய், தனது ஆய்வை மிக ரகசியமாக செய்து வந்தார். எதையும் உலகுக்கு வெளிபடுத்தவே இல்லை.

இருநுறு வருடங்களுக்கு முன்பு கிரிகர் மெண்டலுக்கு சிறிய அங்கிகாரம் கிடைத்திருக்குமாயின், இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சி இதைவிட பன்மடங்காயிருக்கும்.. ஆனால் முடனம்பிக்கையாலும், நிராகடிப்பாலும் ஒரு தனிமனிதனின் உழைப்பு பின்தாங்க வைத்தது....

(படித்ததில் பிடித்தது)
.